மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ரூ.2 லட்சம்.. சந்திரபாபு நாயுடு கவர்ச்சி வாக்குறுதி
அமராவதி: காங்கிஸ் ஆட்சிக்கு தாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ரூ.72 ரூபாய் வழங்குவோம் என அறிவித்துள்ள நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தன்னடைய தெலுங்குதேசம் கட்சி மீண்டும் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருவாய் வழங்குவோம் என அறிவித்துள்ளார்.
அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். இதனால் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன. இது சாத்தியம் இல்லாத வாக்குறுதி, மக்களை ஏமாற்றுவதற்காக காங்கிரஸ் இது போன்ற வாக்குறுதிகளை வழங்குவதாக குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு போட்டி போடும் வகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.2லட்சம் குறைந்த பட்ச வருவாய் வழங்குவோம். இதேபோல் ஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் வரை நிதியுதவி அளிக்கும் திட்டத்தையும் நாயுடு அறிவித்துள்ளார்.
மேலும் உயர்கல்வி இலவசமாக அளிக்கப்படும் என்றும், வெளிநாட்டில் போய் படித்தால் 25 லட்சம் நிதியுதவி, மகளிர் சுயஉதவிக்குழுவில் ஒவ்வொருவருக்கும் 10ஆயிரம் என பல கவர்ச்சி வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
அதேநேரம் ஆந்திராவில் எதிர்க்கட்சியான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் தெலுங்கு தேசம் கட்சிக்கு போட்டியாக பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. இதனால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சந்திராபு நாயுடுவோ, ஜெகன்மோகன் ரெட்டியோ மறந்தும் அறிவிக்கவில்லை.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications