நெருங்க முடியலையே.. சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி.. பாஜகவுக்கு ஷாக் - புது கருத்து கணிப்பு
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவை வீழ்த்தி மீண்டும் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என பரபரப்பான கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் இருக்கிறார். துணை முதல்வராக சிங் தியோ இருக்கிறார். இந்நிலையில் தான் 5 ஆண்டு பதவிக்காலம் முடியும் நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7 ம் தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 17 ம் தேதி 2வது கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
சத்தீஸ்கரை பொறுத்தமட்டில் நேரடி போட்டி என்பது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் உள்ளது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரு கட்சியினரும் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். சத்தீஸ்கரை பொறுத்தமட்டில் மொத்தம் 90 சட்டபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 68 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதேபோல் தான் இந்த முறையும் அதிக இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி அரியணை ஏற பாஜகவும் தீவிரமாக வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில் தான் கிரவுண்ட் ஜீரோ ரீசர்ஜ் (Ground Zero Research) எனும் கருத்து கணிப்பு அமைப்பு சார்பில் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்காக கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 25ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை மொத்தம் 60 தொகுதிகளில் இந்த கருத்து கணிப்பு என்பது மேற்கொள்ளப்பட்டடுள்ளது. அனைத்து சாதி மக்கள், பிரிவு மக்கள் என மொத்தம் 6 ஆயிரம் பேரிடம் இந்த கருத்து கணிப்பு என்பது மேற்கொள்ளப்பட்டது.
இந்த கருத்து கணிப்பின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 50 முதல் 58 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி மீண்டும் மெஜாரிட்டியுடன் சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைக்கும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதோடு காங்கிரஸ் கட்சிக்கு 43 முதல் 47 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக பாஜக 29 முதல் 37 இடங்களில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 37 முதல் 41 சதவீத ஒட்டுக்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர மற்றவர்கள் 1 முதல் 5 இடங்களில் வெற்றி பெறலாம். இவுர்களுக்கு14 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை ஓட்டு கிடைக்க வாய்ப்புள்ளது என கருத்து கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.
-
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications