"சாக்லெட்” ஏற்படுத்திய மரணம்- 10 மாதக் குழந்தை மூச்சுத் திணறி பரிதாப பலி
ஹைதராபாத்: ஆந்திராவில் சாக்லெட் சாப்பிட்ட குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பானியம் கிராமம் பி.சி.காலனியைச் சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி ஹசினா. இந்த தம்பதிக்கு தனா என்ற 3 வயது பெண் குழந்தையும், ரிஹான் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், ஹசினா அழுது கொண்டு இருந்த தனது மகளுக்கு சாப்பிட சாக்லெட் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட தனா சிலவற்றை தரையில் கொட்டினாள். அருகில் தவழ்ந்து கொண்டு இருந்த 10 மாத குழந்தையான ரிஹான் சாக்லெட்டை எடுத்து விழுங்கியது.
இதில் சாக்லெட் தொண்டையில சிக்கி கொண்டது. இதனை கவனித்த தாய் ஓடிவந்து வாயில் விரலை விட்டு எடுக்க முயன்றார். ஆனால் சாக்லெட் தொண்டையில் சிக்கி ஒட்டிக் கொண்டது
மூச்சுதிணறிய குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்து போனது. குழந்தையின் பிணத்தை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் அனைவர் மனதையும் உருக்குவதாக அமைந்தது.












Click it and Unblock the Notifications