இந்தியாவுடனான மோதலில் கமாண்டிங் அதிகாரி உள்பட 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு.. சீனா ஒப்புதல்
லடாக்: கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் சீன ராணுவ கமாண்டிங் அதிகாரி உள்பட 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக சீனா ஒப்புதல் அளித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறலில் ஈடுபட்ட சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடந்த 15ம் தேதி இரவு மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கைகலப்பாக மாறியது. இதில் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான பீகார் ரெஜ்மெண்டைச் சேர்ந்த படை வீரர்கள் 13 பேர் உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த மோதலில் இந்தியாவைப் போல் சீனாவிலும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 40 பேர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் உயிரிழப்பு குறித்த தகவல்களை சீனா வெளியிட மறுத்துவிட்டது. உயிரிழப்பு எண்ணிக்கை எவ்வளவு என்று வெளியிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே தேசிய உணர்வு எழுந்து பிரச்சனையை உருவாக்கும் என்றும் அதனால் தான் சீனா உயிரிழப்பு விவரத்தை வெளியிடுவதை தவிர்த்தவிட்டதாகவும் சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை கூறியிருந்தது.
இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் சீன ராணுவ கமாண்டிங் அதிகாரி உள்பட 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக சீனா முதல் முறையாக ஒப்புதல் அளித்துள்ளது. சீன அதிகாரிகள் தங்கள் அதிகாரிகளின் இறப்பு குறித்து இந்தியாவிற்கு அப்போதே தகவல் கொடுத்திருந்தனர், ஆனால் இது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகம் ஜூன் 18ம் தேதி நாளிதழ் பதிப்பில் செய்தி சிறிய அளவில் வெளியிட்டு இருக்கிறது. அது இப்போது முதல்முறையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Recommended Video
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications