ஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் அத்துமீறல்..எல்லை தாண்டிய சீன வீரர்கள்.. விரட்டியடித்த கிராமவாசிகள்
ஸ்ரீநகர்: இந்தியாவின் சாலைகளைப் பயன்படுத்தி எல்லைப் பகுதிகளில் சீனா ராணுவம் தொடர்ந்து ஊடுருவி வருவதாக எல்லையில் அமைந்துள்ள கோயுல் கிராம தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக, கல்வான் மோதலுக்குப் பின் நிலைமை மேலும் மோசமானது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல சீனா தரப்பில் சுமார் 43 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் வீரர்களைத் தொடர்ந்து குவித்து வருகின்றனர். இதனால் எல்லையில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. நிலைமை சரி செய்ய இரு தரப்பிற்கும் இடையே நேற்று ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சீனா ஊடுருவல்
இந்நிலையில், இந்தியாவின் சாலைகளைப் பயன்படுத்தி எல்லை கிராமங்களில் சீனா ராணுவம் தொடர்ந்து ஊடுருவி வருவதாக எல்லையில் அமைந்துள்ள கோயுல் கிராம தலைவர் உர்கேன் செவாங் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக டிசம்பர் 10 மற்றும் 16ஆம் தேதிகளில் எடுக்கப்பட்டுள்ள இரண்டு வீடியோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மேய்ச்சலுக்குச் சென்ற கிராமவாசிகள்
கடந்த டிசம்பர் மாதம் மேய்ச்சலுக்காக எல்லையில் அமைந்துள்ள பகுதிகளில் கிராமத்தினர் சென்றுள்ளனர். அப்போது சீன ராணுவத்தினர் இந்திய பகுதிகளுக்குள் நுழைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாக அவர் தெரிவித்தார். மேலும், உடனடியாக மேய்ச்சலுக்கு சென்றிருந்த கிராமத்தினரையும் அங்கிருந்து செல்லும்படி வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து இந்திய பாதுகாப்புப் படையினருக்கு கிராமவாசிகள் தகவல் அளித்துள்ளனர்.

நாங்கள் காவல் காத்தோம்
இது குறித்து அவர் கூறுகையில், "பாதுகாப்புப் படையினரின் எங்களை அங்கிருந்து நகர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். எனவே, அவர்களின் அறிவித்தலின்படி அதே இடத்தில் நாங்கள் சுமார் ஐந்து நாட்கள் இருந்தோம். சீன ராணுவம் மேலும் இந்தியப் பகுதிக்குள் வராத வகையில் நாங்கள் காவல் காத்தோம்" என்று அவர் தெரிவித்தார்.

விரட்டி அடித்தோம்
மேலும், "சில நாட்களுக்குப் பின், மீண்டும் டிசம்பர் 16ஆம் தேதி சீன ராணுவம் இந்தியா எல்லைக்குள் நுழைந்தனர். ஆனால், அப்போது இந்தோ திபத் காவல் படையினர் உள்ளிட்டோர் எல்லையில் எங்களுடன் தயாராக இருந்தனர். இந்தியாவுக்குள் நுழைய முயன்ற அவர்களை நாங்கள் விரட்டி அடித்தோம். வழக்கமாக, இந்த காலகட்டத்தில் இங்கு கடும் குளிர் நிலவும். இதனால் இச்சமயத்தில் யாரும் இங்கு வர மாட்டார்கள். அவர்கள் இந்தியாவின் சாலைகளையே பயன்படுத்தி நம் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்" என்றார்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications