அரசியல் முதிர்ச்சி இல்லாத ராஜீவ் காந்தி... இந்திரா மறைவுக்கு முன்பே கணித்த சிஐஏ
ராஜீவ் காந்தி அரசியல் முதிர்ச்சி இல்லாதவர் என இந்திரா மறைவுக்கு முன்னரே சிஐஏ கணித்திருக்கிறது.
டெல்லி: இந்திரா காந்தி படுகொலைக்கு முன்னரே ராஜீவ் காந்தியை அரசியல் முதிர்ச்சி இல்லாதவர்; கட்சியை பலப்படுத்தும் திறமை இல்லாதவர் என அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ கணித்ததாக பழைய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
1980களில் இந்தியா- இலக்குகளும் சவால்களும் என்ற தலைப்பிலான சிஐஏவின் அறிக்கை 30 பக்கங்களைக் கொண்டது. இதில் 1985-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் வெல்வாரா? திடீரென அவர் இறந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பத பல்வேறு விவகாரங்களை சிஐஏ ஆராய்ந்துள்ளது.
இந்திரா காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் இப்படி ஒரு ஆய்வை சிஐஏ நடத்தியிருக்கிறது. 1983-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதியிட்ட அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

அரசியல் முதிர்ச்சி இல்லை
இந்திரா இறந்தால் அடுத்த தலைவரை தேர்வு செய்வதில் ராஜீவ் முக்கிய பங்கு வகிப்பார். ஆனால் ராஜீவ் அந்த இடத்துக்கு போக முடியாது. ஏனெனில் ராஜிவ் காந்தி அரசியல் முதிர்ச்சியில்லாதவர்.

தாக்கு பிடிக்க முடியாது
கட்சியையோ பொதுமக்களையோ வசீகரிக்கக் கூடியவராக ராஜீவ் இருக்க மாட்டார். அப்படியே ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தாலும் நீண்டகாலம் தாக்கு பிடிக்க முடியாது.

இந்திராவை போல இல்லை
அவரது தாயாரைப் போல வலிமை மிக்க தலைவராக உருவெடுக்கமாட்டார். அவரால் கட்சியை வளர்த்தெடுக்க முடியாது.

அடுத்த தலைவர்கள்?
இந்திராவுக்குப் பின்னர் ஆர்.வெங்கட்ராமன், பி.வி. நரசிம்மராவ், பிரணாப் முகர்ஜி, என்.டி. திவாரி ஆகியோர் காங்கிரஸில் தலைவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு சிஐஏ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க!












Click it and Unblock the Notifications