கிரண்பேடியுடன் வலுக்கிறது மோதல்… புதுவை முதல்வர் நாராயணசாமி ராகுல் காந்தியை சந்தித்து முக்கிய ஆலோசனை
கிரண்பேடியுடன் மோதல் முற்றி வருவதால் புதுவை முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசினார். புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
மத்திய ஆளும் பாஜக அரசு புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. தற்போது 3 புதிய நியமன எம்எல்ஏக்களுக்கு கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததையடுத்து புதுவையில் பிரச்சனை பெரிய அளவில் வெடித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி சென்றுள்ள புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நியமன எம்எல்ஏக்கள் பிரச்சனை
புதுவையில் நடக்கும் பிரச்சனை குறித்து ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினேன். நியமன எம்எல்ஏக்களை நியமிக்க மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு. ஆனால் தற்போது துணை நிலை ஆளுநர் பரிந்துரையின் பேரில் அது நிகழ்ந்துள்ளது.

செல்லாத நியமனம்
மூன்று எம்எல்ஏக்கள் நியமனம் செல்லாது. இதனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஊர்வலம், தெருமுனைப் பிரச்சாரம் என ஜனநாயக பூர்வமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

வளர்ச்சிக்கு குந்தகம்
புதுவையில் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எப்படி எல்லாம் அரசின் வேலைகளை செய்யவிடாமல் தடுக்கிறார் என்பது குறித்தெல்லாம் ராகுல் காந்தியிடம் சொல்லி இருக்கிறேன்.

நல்ல தீர்வு
புதுவையின் வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து போராடும் கடமையும் பொறுப்பும் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று கருதுகிறேன் என்று நாராயணசாமி கூறினார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications