நாடாளுமன்றத்தில் கமல்நாத், குலாம் நபி எதிர்க்கட்சி தலைவர்களாகிறார்கள்: சோனியா- ராகுல் இல்லை
டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக கமல்நாத்தையும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக குலாம்நபி ஆசாத்தையும் நியமிக்க சோனியாகாந்தி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
வாஜ்பாய் ஆட்சியில் சோனியாகாந்திதான் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். இம்முறையும் அவரையே மக்களவையின் காங்கிரஸ் குழு தலைவராக நியமிக்க கட்சியி எம்பிக்கள் விரும்புகிறார்கள். ஆனால் பிரச்சாரத்தின்போது தனது குடும்பத்தை கடுமையாக விமர்சனம் செய்த மோடியை எதிர்கொண்டு பணியாற்ற சோனியா தயங்குவதாக கூறப்படுகிறது.

அதேநேரம் அனைத்து கட்சி உறுப்பினர்களுடனும் நல்ல தொடர்பிலுள்ள 9 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட கமல்நாத்தை எதிர்க்கட்சி தலைவராக்குவது சரி என்று சோனியா நினைக்கிறார். மாநிலங்களவைக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தை எதிர்க்கட்சி தலைவராக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாகும் அந்தஸ்தை பெறவில்லை என்பதால், கமல்நாத் காங்கிரஸ் குழு தலைவர் என்றே அழைக்கப்படுவார்.












Click it and Unblock the Notifications