மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நாடாளுமன்றம் முற்றுகை.. சோனியா, மன்மோகன்சிங் கைது
டெல்லி: ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் மீது பாஜக குற்றம்சாட்டுவது, உத்தராகண்ட், அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது போன்றவற்றை கண்டித்து 'ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்' என்ற பெயரில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றம் நோக்கி, பேரணி நடத்தியது.
பேரணிக்கு முன்பு, ஜந்தர் மந்தரில் கட்சி தலைவர் சோனியாகாந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் உரையாற்றினர். அப்போது, அரசுக்கு எதிராக அவர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
Delhi: Congress begins its 'Loktantra Bachaao' march from Jantar Mantar to Parliament pic.twitter.com/MhwfZaCoVV
— ANI (@ANI_news) May 6, 2016
இதை தொடர்ந்து, திரளான தொண்டர்களுடன், நாடாளுமன்றம் நோக்கி அவர்கள் பேரணியாக புறப்பட்டனர். நாடாளுமன்றத்தை சுற்றி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால், அங்கு நுழைந்த இந்த தலைவர்களை போலீசார் கைது செய்தனர். சில நிமிடங்களில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.