பிராமணர்களும் பனியாக்களும் எங்க பாக்கெட்டில்.. பாஜகவின் முரளிதர ராவ் பேச்சால் வெடித்தது சர்ச்சை
போபால்: பிராமணர்களும் பனியாக்களும் எங்க பாக்கெட்டில்தான் இருக்காங்க.. என்று பாஜகவின் பொதுச்செயலாளரும் மத்திய பிரதேச பொறுப்பாளருமான முரளிதர ராவ் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முரளிதர ராவ் பேசியதாவது: பாஜகவும் பாஜக ஆட்சிகளும் பழங்குடிகள், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன.
பழங்குடிகள், தாழ்த்தப்பட்டோரை வாக்கு வங்கிகளாக நாங்கள் கருதவில்லை. அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி திட்டங்களை வழங்கவே பாஜக விரும்புகிறது. அதனால்தான் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் மீது கவனம் செலுத்துகிறோம். இவ்வாறு முரளிதர் ராவ் கூறினார்.

பாஜகவின் முழக்கத்தில் முரண்பாடு
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், பாஜக என்றாலே பிராமணர்கள், பனியாக்கள் கட்சிதான் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் மீது கரிசனம் காட்டுகிறீர்கள், ஆனால் அனைவருக்குமான வளர்ச்சி, முன்னேற்றம் என முழக்கம் எழுப்புகிறீர்கள்.. இது முரண்பாடாக இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

பிராமணர்கள்- பனியாக்கள் எங்க பாக்கெட்டில்
இதற்கு பதிலளித்த முரளிதர ராவ், ஆமாம்.. பிராமணர்களும் பனியாக்களும் எங்க பாக்கெட்டில்தான் இருக்காங்க.. பாஜகவில் பிராமணர்கள், பனியாக்கள் அதிகம் இருப்பதால்தான் ஊடகங்கள் எங்கள் கட்சியை பிராமணர்கள்-பனியாக்கள் கட்சி என குறிப்பிடுகின்றன. பாஜகவை பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை பெறுவதில் உறுதியாக உள்ளது. அதை நோக்கி பயணித்து வருகிறோம் என்றார்.

காங். கண்டனம்
முரளிதர ராவின் இந்த பதில் இடம்பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு விவாதப் பொருளானது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான கமல்நாத், அனனிவருக்குமான வளர்ச்சி என்கிற பாஜக. ஆனால் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள முரளிதர ராவோ, பிராமணர்கள்- பனியாக்கள் எங்கள் பாக்கெட்டில் என்கிறார். அதிகாரம் கையில் இருக்கிறது என்கிற மமதையில் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர் என சாடினார்.

முரளிதர ராவ் பதிலடி
இதற்கு விளக்கம் அளித்துள்ள முரளிதர ராவ், நாங்கள் எந்த ஒரு சமூகத்தையும் ஒதுக்கிவைக்கவும் இல்லை- பாகுபாடு காட்டவும் இல்லை. நாட்டின் அனைத்து சமூக மக்களுக்கும் துரோகம் இழைத்தது காங்கிரஸ்தான். பழங்குடி இன மக்களும் தாழ்த்தப்பட்டவர்களும் பின்தங்கி இருக்க காரணமே காங்கிரஸ்தான். என்னுடைய கருத்தை காங்கிரஸ் தலைவர்கள் திரித்து பரப்பி வருகின்றனர் என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications