நீதிமன்ற உத்தரவை மதிக்காத நிதின் கட்கரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத காரணத்திற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை, டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Nitin Gadkari

வழக்கு தொடர்பான பிரமாணப் பத்திரத்தை கெஜ்ரிவால் தரப்புக்கு முன்னதாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அதனை கட்கரி தரப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இன்று விசாரணை நடைபெற்றபோது, கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் ரிஷிகேஷ் நீதிபதியுடம் புகார் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த கட்கரியின் வழக்கறிஞர், கெஜ்ரிவாலின் மற்றொரு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனிடம் கடந்த 18ஆம் தேதி பிரமாணப் பத்திரத்தை வழங்கிவிட்டதாக கூறினார்.

ஆனால் இதுதொடர்பாக நீதிமன்ற பதிவேட்டில் குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, பிரமாணப் பத்திரத்தை முன்கூட்டியே வழங்காததற்காக கட்கரி தரப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+