அவதூறு வழக்கு... டெல்லி கோர்ட்டில் ஆஜராகத் தவறிய ஷீலா தீட்சித்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்
டெல்லி: பாஜக வேட்பாளர் விஜேந்தர் குப்தா மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ஆஜராகத் தவறியதால் முன்னாள் டெல்லி முதல்வரும், கேரள கவர்னருமான ஷீலா தீட்சித்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் டெல்லி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்து பாஜக சார்பில் விஜேந்தர் குப்தா களமிறங்கினார். தேர்தல் பிரச்சாரத்தின் மீது டெல்லி அரசின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார் விஜேந்தர் குப்தா.

அதனைத் தொடர்ந்து டெல்லி கோர்ட்டில் விஜேந்தர் குப்தா மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார் ஷீலா தீட்சித். ஆனால், இந்த வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார் ஷீலா தீட்சித்.
இதனால், ஷீலா தீட்சித்திற்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து டெல்லி கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இதே காரணத்திற்காக கோர்ட் அவருக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications