ஆந்திரா:அம்பதி ராயுடுவுக்கு வலை வீசிய காங்கிரஸ், பாஜக-சட்டென சந்தித்தது சி.எம். ஜெகன் மோகன் ரெட்டி!
விசாகப்பட்டினம்: ஓய்வு பெறுவதாக அறிவித்த கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு அடுத்த இன்னிங்ஸாக அரசியலில் நுழைய இருக்கிறார் என்கின்றன ஊடக தகவல்கள். ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அம்பதி ராயுடு சந்தித்ததை தொடர்ந்து இந்த தகவல்கள் பேசுபொருளாகி இருக்கின்றன.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் கோப்பையை வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பதி ராயுடு இடம் பெற்றிருந்தார். இத்தொடரும் அவர் தமது ஓய்வு முடிவையும் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த அம்பதி ராயுடுவை தங்களது கட்சிகளில் சேர்க்க பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டினர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதின், அம்பதி ராயுடுவை காங்கிரஸில் இணைப்பதில் மும்முரம் காட்டினார். ஆந்திரா சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெறுவதால் அம்பதி ராயுடுவை வளைப்பதில் கட்சிகள் மும்முரம் காட்டின.
இந்த நிலையில் ஆந்திரா முதல்வரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை நேற்று அம்பதி ராயுடு சந்தித்து பேசினார். அப்போது ஐபிஎல் கோப்பையை ஜெகன் மோகன் ரெட்டியிடம் காண்பித்து வாழ்த்தும் பெற்றார் அம்பதி ராயுடு.
இதனைத் தொடர்ந்து அம்பதி ராயுடு விரைவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸில் இணைவார்; ஆந்திரா சட்டசபை தேர்தல் அல்லது லோக்சபா தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக அவர் போட்டியிடக் கூடும் என ஊடகங்கள் எழுதத் தொடங்கி உள்ளன. அத்துடன் அம்பதி ராயுடுவின் உறவினரான அம்பதி ராம்பாபு, ஜெகன் மோகன் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார் என்பதையும் ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இருப்பினும் அம்பதி ராயுடு தமது அரசியல் பிரவேச முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர்தான் அம்பதி ராயுடு; ஆனால் வளர்ந்தது எல்லாமே ஹைதராபாத்தில். ஆகையால் தெலுங்கானா மாநில அரசியலிலும் அவரை இழுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications