ராஜஸ்தானில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 6,521 பேருக்கு பாதிப்புகளும், 113 பேரும் உயிரிழந்தனர்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் முழு ஊரடங்கு இன்று வரை முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு ஜூன் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்த்துளளார்.
வேளாண் சட்டங்களை கண்டித்து.. மே 26-ல் விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம்.. தி.மு.க ஆதரவு!
நாளை காலை 5 மணி முதல் ஜூன் 8 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை மும்மடங்கு கடுமையான முறையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து ராஜஸ்தானுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமையில் வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.