மாட்டுக் கறி.. முஸ்லீம் முதியவரைக் கொன்றவர்கள் "அப்பாவிக் குழந்தைகள்".. பாஜக தலைவர் திமிர் பேச்சு
லக்னோ: டெல்லி அருகே தாத்ரி என்ற இடத்தில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் நபரை கொடூரமாக அடித்துக் கொன்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் சிறார்கள் என்று கூறி மடத்தனமாக பேசியுள்ளார் உபி. பாஜக தலைவர் ஒருவர்.
தாத்ரி கிராமத்தை் சேர்ந்த 52 வயதான முகம்மது இக்லாக் என்ற முஸ்லீம், அவரது வீட்டில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கொலைகாரக் கும்பல் இக்லாக்கையும், அவரது மகனையும் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து தாக்கியது.

செங்கற்களால் சரமாரியாக அடித்தில் இக்லாக் பரிதாபமாக இறந்து போனார். அவரது மகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொடுமையான சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. அதை விடக் கொடுமை, இக்லாக் வீட்டில் இருந்த கறி மாட்டுக் கறியா, ஆட்டுக் கறியா என்று சோதிக்க அதை தடவியல் சோதனைக்கு போலீஸார் அனுப்பியதுதான்.
இந்த நிலையில் உ.பியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நவாப் சிங் நாகர் என்பவர் சர்ச்சையாகப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு ஆர்வக் கோளாறில்தான் நடந்து விட்டது. மேலும் இதில் ஈடுபட்டதாக கைதானவர்கள் அப்பாவிக் குழந்தைகள். அவர்களுக்கு 10 முதல் 15 வயதுக்குள்தான் இருக்கும் என்று கூறியுள்ளார் இந்த முட்டாள் மாஜி எம்.எல்.ஏ..
100 பேர் சேர்ந்து இக்லாக்கையும், அவரது மகனையும் சரமாரியாக கொலைவெறியுடன் தாக்கியுள்ளன். இந்தக் கும்பலை எப்படிக் குழந்தைகள், அதுவும் அப்பாவிக் குழந்தைகள் என்று இந்த அமைச்சர் கூறுகிறார் என்றே தெரியவில்லை. இப்படி லூசுத்தனமாக பேசிய இவர் தாத்ரி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ என்பதுதான் கொடு்மையிலும் கொடுமை.












Click it and Unblock the Notifications