பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்… கொல்வோருக்கு ஆயுள்.. இது ராஜஸ்தான் ஹைகோர்ட்!
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஜெய்ப்பூர்: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இந்நிலையில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த பரிந்துரை அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மேலும், பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது ராஜஸ்தானில் உள்ள சட்டப்படி பசுவை கொன்றவர்கள் என்று நிருபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

விற்கத் தடை
ராஜஸ்தானில் கன்று, பசு, காளை ஆகிய கால்நடைகளை வெட்டுவதற்கும் கறியை விற்பனைக்காக எடுத்துச் செல்வதற்கும் ஏற்கனவே தடையுள்ளது.

தடைக்கு இடைக்கால தடை
மாட்டிறைச்சிக்கு தடை என்று மத்திய அரசு உத்தரவிட்ட உடன் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாட்றைச்சி மற்றும் மாடு விற்பனை மீதான தடைக்கு 4 வார காலம் இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் விதித்தது.

எதிர்க்கட்சிகள் போராட்டம்
இதனைக் கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதே போன்று காங்கிரஸ் கட்சியும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

கேரளாவில் சிறப்பு சட்டசபைக் கூட்டம்
கேரளா முதல்வர் பினராயி விஜயன் மாட்டுக்கறி தடை மீது விவாதிக்க சிறப்பு சட்டசபையை கூட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த உத்தரவை கடுமையாக எதிர்த்துள்ளார். இந்த பரபரப்பான சூழலில் ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்றம் இப்படி கூறியிருப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications