Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் பெண் போலீஸின் மகள் மயக்க மருந்து கொடுத்து நண்பர்களால் ஓடும் காரில் பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தெற்கு டெல்லியில் பெண் போலீஸ் கான்ஸ்டபிளின் 23 வயது மகள் தனது ஆண் நண்பர் உள்ளிட்ட 3 பேரால் ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

தெற்கு டெல்லியில் கான்ஸ்டபிளாக இருக்கும் பெண்ணின் 23 வயது மகள் தனது ஆண் நண்பருடன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காரில் வெளியே சென்றுள்ளார். காரில் அந்த நபருடன் அவரின் நண்பர்கள் 2 பேர் இருந்துள்ளனர்.

அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த கூல் ட்ரிங்ஸை அளித்துள்ளனர். அதை குடித்த உடன் அந்த பெண் மயங்கிவிட்டார். மயக்க நிலையில் இருந்த அவரை காரில் இருந்த 3 ஆண்களும் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பிறகு அவர்கள் அப்பெண்ணை நேரு பிளேஸ் பகுதியில் சாலையோரம் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

சாலையோரம் ஒரு பெண் மயங்கிக் கிடப்பதை பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மயக்கம் தெளிந்த அவர் தன்னை தனது நண்பரும், அவரின் நண்பர்கள் 2 பேரும் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+