திருமணத்துக்கு ரூ2.5 லட்சம் மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்புக்கு எதிரான மனு தள்ளுபடி!
திருமண செலவுக்கான உச்சவரம்பை நீக்கக் கோரும் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி: திருமணத்துக்கு ரூ2.5 லட்சம் மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்புக்கு எதிரான மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் திருமணத்துக்கு ரூ2.5 லட்சம் மட்டுமே எடுக்க முடியும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரோகினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கு விசாரணையின் போது ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், திருமண அழைப்பிதழ்கள் இருப்பவர்கள் வங்கிக்கு சென்று ரூ2.5 லட்சம் எடுத்துக் கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நேற்று கூறியிருந்தது. இந்த நிலையில் திருமண செலவுக்கான உச்சவரம்பை நீக்க கோரும் மனுவை இன்று தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். மேலும் மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications