டிடிவி தினகரனை மேலும் 2 நாட்கள் கஸ்டடியில் எடுக்கிறது டெல்லி போலீஸ்!
டிடிவி தினகரனை மேலும் 2 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் மனுவை நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் தாக்கல் செய்ய உள்ளது.
டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனை மேலும் 2 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புரோக்கர் சுகேஷ் மூலம் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் தினகரன் என்பது வழக்கு. இவ்வழக்கில் சுகேஷ், தினகரன் மற்றும் மல்லி என்ற மல்லிகார்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிடிவி தினகரனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்த டெல்லி போலீஸ் சென்னைக்கு அழைத்து வந்து துருவி துருவி விசாரணை நடத்தியது. தினகரன் வீட்டில் அவரது மனைவி அனுராதாவிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் தேர்தல் ஆணையத்துக்கு தினகரன் ரூ50 கோடி லஞ்சம் கொடுக்க உதவியதாக சந்தேகிக்கப்படும் 16 பேருக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது. தினகரனுக்காக கொச்சி வழியாக டெல்லிக்கு சரக்கு விமானத்தில் பணம் எடுத்துச் சென்றதில் தொடர்புடையதாக கூறப்படும் அமைச்சர் உடுமை ராதாகிருஷ்ணனையும் டெல்லி போலீஸ் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் தினகரனை மேலும் 2 நாட்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளது டெல்லி போலீஸ். 5 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட்ட தினகரன், மனைவி அனுராதாவிடம் துருவி துருவி விசாரித்தபோது கதறி கதறி அழுதார் என்கின்றன டெல்லி போலீஸ் வட்டாரங்கள்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக











Click it and Unblock the Notifications