கேரளாவில் மழைக்கு நடுவேயும் விறுவிறு... மாலை 6 மணிவரை 72.5% வாக்குகள் பதிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை தொடர்ந்த போதும் மாலை 6 மணி வரை விறுவிறுவென 72.5% வாக்குகள் பதிவாகி உள்ளன.
கேரளாவின் 14-வது சட்டசபைக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இம்மாநிலத்தின் மொத்தம் உள்ள 140 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகள் முன்னணிக்கும் இடையே போட்டி உள்ளது. பாஜகவும் இத்தேர்தலில் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
கேரளா தேர்தல் களத்தில் மொத்தம் 1,203 வேட்பாளர்கள் களம் கண்டனர். மொத்தம் 2.60 கோடி வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
கேரளாவின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இருந்தபோதும் காலையில் இருந்தே வாக்குச்சாவடிகளில் கூட்டம் அலைமோதியதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
கேரளா ஆளுநர் சதாசிவம், உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, மார்க்சிஸ்ட் தலைவர் பிணராய் விஜயன், பாஜக வேட்பாளரான கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் காலை 7 மணிக்கே தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். திருவனந்தபுரத்தில் ராஜ்யசபா எம்.பி. நடிகர் சுரேஷ் கோபி வாக்களித்தார்.
கேரளாவிலும் சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருந்தன. இங்கு அமைதியாக தேர்தல் நடைபெற 52,000 பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கேரளாவில் காலை 9 மணிவரையிலான நிலவரப்படி 13.5% வாக்குகள் பதிவாகி இருந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் வாக்குப் பதிவு முடிவடைந்த போது 72.5% வாக்குகள் பதிவாகி இருந்தன.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications