பொசுக்கென்று போராட்டத்தில் உட்கார்ந்து விடுவதுதான் தேவகவுடா ஸ்டைல்
பெங்களூர்: காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க இன்று கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடா, இதற்காக பெங்களூரில் இன்று கால வரையற்ற உண்ணா விரதம் தொடங்கியுள்ளார் தேவகவுடா.
முன்னாள் பிரதமர் என்ற கிரீடத்தையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு, கர்நாடக மக்களுக்காக வீதியில் உட்கார்ந்துவிடுவது தேவகவுடா வாடிக்கை.

அவரது அரசியல் வாழ்க்கையில் நீண்ட கால போராட்டம் என்பது, பெங்களூர்-மைசூர் நடுவே நந்தி காரிடார் நிறுவனம் அமைத்த நைஸ் சாலைக்கு எதிரானது. சுமார் 13 வருட காலம் தேவகவுடா நீண்ட போராட்டங்களை நடத்தி அந்த திட்டத்தை இதுவரை செயல்படுத்தவிடாமல் வைத்துள்ளார்.
இப்போது நைஸ் சாலை வெறுமனே, பெங்களூரின் புறநகர் சாலை என்ற அளவில் உள்ளதே தவிர, மைசூருக்கு சென்று சேர முடியவில்லை. அதேநேரம், நந்தி காரிடார் நிறுவன தலைவர் அசோக் கெனி, தேர்தலில் போட்டியிட்டு, எம்எல்ஏவாகிவிட்டபோதிலும், துரும்பையும் அவரால் கிள்ளிப்போட முடியவில்லை.
2011ல் இப்படித்தான், எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவரது வீட்டுக்கு முன்னால் போய் உட்கார்ந்து தர்ணா செய்ய ஆரம்பித்துவிட்டார். தன்னை தேர்ந்தெடுத்த ஹாசன் லோக்சபா தொகுதிக்கு எடியூரப்பா அரசு கேட்ட திட்டங்களை அறிவிக்கவில்லை எனப்து போராட்டத்திற்கு காரணம்.
கடந்த ஆண்டு ஜூலையில், விவசாயிகள் பிரச்சினையை பேச லோக்சபா சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, நாடாளுமன்றம் எதிரே உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் தேவகவுடா.
2012 டிசம்பர் மாதம், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார் தேவகவுடா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications