அடுத்த சில நாட்களுக்கு வீட்டிற்கு செல்லாதீர்கள்.. காஷ்மீர் போலீசாருக்கு ராணுவம் அறிவுரை!
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல் காரணமாக காஷ்மீர் போலீசார் மற்றும் சிறப்பு காவல்படையினர் யாரும் சில நாட்களுக்கு வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல் காரணமாக காஷ்மீர் போலீசார் மற்றும் சிறப்பு காவல்படையினர் யாரும் அடுத்த சில நாட்களுக்கு விடுப்பு எடுக்க வேண்டாம், வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் போலீசார் மூவர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாதுகாப்பு கருதி இந்திய ராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ஏற்கனவே இதனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் நடத்த இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய எல்லையில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

எத்தனை பேர் மரணம்
போலீசார் மற்றும் சிறப்பு காவல்படையை சேர்ந்த வீரர்கள் தீவிரவாதிகளால் காஷ்மீரில் கடத்தி கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஜனவரியில் இருந்து இப்படி கொலை நடப்பது அதிகமாகி வருகிறது. கடந்த ஜனவரியில் இருந்து மட்டும் சுமார் 37 போலீசார் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

எச்சரிக்கை
இந்த நிலையில்தான் காஷ்மீரில் போலீசார் பதவி விலகி வேண்டும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நைகோ எச்சரிக்கை விடுத்து இருந்தான். வேலையை விடவில்லை என்றால் கொலை செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தான். இதனால் சில போலீசார் தங்கள் வேலையை விடுவதும் நடந்தது.

தொடர் கொலை
கடந்த வாரம் சரியாக இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் அன்று சிறப்பு காவல்படை அதிகாரி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதன்பின், அடுத்த இரண்டு நாட்களில் மூன்று போலீசார் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். மூன்று பேரும், கழுத்தறுக்கப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என்ன அறிவுறுத்தல்
இந்த நிலையில் போலீசார் யாரும் இன்னும் சில நாட்களுக்கு வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று ராணுவம் அறிவுறுத்தி இருக்கிறது. வீட்டிற்கு செல்லும், வேலையின்றி வீட்டில் விடுமுறையில் இருக்கும் போலீசார்தான் கொலை செய்யப்படுகிறார்கள். இதனால் போலீசார் யாரும் விடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications