கர்நாடகாவில் வழக்கம்போல ரயில்கள் இயக்கம்- மாண்டியாவில் மட்டும் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்திருந்தாலும் அம்மாநிலத்தில் ரயில்கள் வழக்கம் போல இயங்குகின்றன. மாண்டியாவில் மட்டும் ரயில் மறியல் போராட்டம் நடத்த முயற்சித்த கன்னட அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக கன்னட அமைப்புகள் வன்முறையில் இறங்கியுள்ளன. கடந்த 9-ந் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

துணை ராணுவம் குவிப்பு

துணை ராணுவம் குவிப்பு

அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமையன்று ஒரே நாளில் 100க்கும் அதிகமாக தமிழக வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

வாட்டாள் அறிவிப்பு

வாட்டாள் அறிவிப்பு

இதனிடையே இன்று மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்திருந்தன. பெங்களூருவில் மைசூர் வங்கி சர்க்கிளில் போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜ் இதை உறுதிப்படுத்தியிருந்தார்.

மாண்டியாவில் மட்டும்...

மாண்டியாவில் மட்டும்...

இன்று காலை 6 மணி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாண்டியாவில் மட்டும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட சிலர் முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

வழக்கம் போல...

வழக்கம் போல...

பொதுவாக கர்நாடகா முழுவதும் ரயில்கள் வழக்கம் போல இயங்குகின்றன. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க ரயில்வே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் பயணிகள் அச்சமடையத் தேவையில்லை என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+