சுனந்தா மரணம் : அதிகப்படியான ‘மன உளைச்சல்’ மருந்து தான் காரணமா?
டெல்லி: மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மர்ம மரணத்தின் பிண்ணனியில், மன உளைச்சல் காரணமாக அவர் எடுத்துக் கொண்ட மருந்துகளே இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
பாகிஸ்தான் பத்திரிக்கையாளரோடு காதல் என மத்திய அமைச்சர் சசிதரூர் மீது குற்றஞ்சாட்டிய அவரது மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் மரணமடைந்தார். நேற்று நடைபெற்ற அவரது பிரேத பரிசோதனையின் முடிவில் அவரது மரணம் இயற்கையானது அல்ல என மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளிவர இன்னும் இரண்டு தினங்களுக்கு மேலாகும் எனச் சொல்லப் படுகிறது.

இந்நிலையில், சுனந்தா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மனஉளைச்சலை தடுப்பதற்கான மருந்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டது கூட அவருடைய மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இருப்பினும் பிரேத விசாரணையின் இறுதி அறிக்கை இன்னும் 2 நாட்களில் வந்தபின்தான் உண்மையான காரணம் தெரியவரும் என்று, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் துணை கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சுனந்தா தரூரின் மகன் மற்றும் சகோதரர் மற்றும் சசிதரூரின் இரு வேலைக்காரர்கள் ஆகியோரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விட்டது. சசிதரூரிடம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) வாக்குமூலம் பதிவு செய்ய இருந்தோம். ஆனால், சசிதரூரும், அவருடைய குடும்பத்தினரும் அரித்துவார் செல்வதாக தெரிவித்ததால், திங்கட்கிழமை அன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications