சுனந்தா மரணம் : அதிகப்படியான ‘மன உளைச்சல்’ மருந்து தான் காரணமா?
டெல்லி: மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மர்ம மரணத்தின் பிண்ணனியில், மன உளைச்சல் காரணமாக அவர் எடுத்துக் கொண்ட மருந்துகளே இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
பாகிஸ்தான் பத்திரிக்கையாளரோடு காதல் என மத்திய அமைச்சர் சசிதரூர் மீது குற்றஞ்சாட்டிய அவரது மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் மரணமடைந்தார். நேற்று நடைபெற்ற அவரது பிரேத பரிசோதனையின் முடிவில் அவரது மரணம் இயற்கையானது அல்ல என மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளிவர இன்னும் இரண்டு தினங்களுக்கு மேலாகும் எனச் சொல்லப் படுகிறது.

இந்நிலையில், சுனந்தா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மனஉளைச்சலை தடுப்பதற்கான மருந்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டது கூட அவருடைய மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இருப்பினும் பிரேத விசாரணையின் இறுதி அறிக்கை இன்னும் 2 நாட்களில் வந்தபின்தான் உண்மையான காரணம் தெரியவரும் என்று, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் துணை கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சுனந்தா தரூரின் மகன் மற்றும் சகோதரர் மற்றும் சசிதரூரின் இரு வேலைக்காரர்கள் ஆகியோரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விட்டது. சசிதரூரிடம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) வாக்குமூலம் பதிவு செய்ய இருந்தோம். ஆனால், சசிதரூரும், அவருடைய குடும்பத்தினரும் அரித்துவார் செல்வதாக தெரிவித்ததால், திங்கட்கிழமை அன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications