தானே: குடிபோதையில் மனைவியை தெருவில் வைத்து நிர்வாணமாக்கி, தாக்கிய கணவன்

Subscribe to Oneindia Tamil

தானே: தானேவில் குடிபோதையில் மனைவியை நிர்வாணமாக்கி கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவான்டியைச் சேர்ந்தவர் கமால் அன்சாரி(30). அவருக்கு தனது 28 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வந்த அன்சாரி தனது மனைவியை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்தார். தெருவில் வைத்து அவரை நிர்வாணமாக்கி கூர்மையான ஆயுதத்தால் அவரின் உடலில் பல்வேறு இடங்களில் குத்தினார்.

இதில் காயம் அடைந்த அந்த பெண் பிவான்டியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அன்சாரி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரக் கோரி உள்ளூரைச் சேர்ந்த என்ஜிஓவான ஜாகோ பிவான்டி ஜாகோ துணை கமிஷனர் அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தியது.

இதையடுத்து போலீசார் அன்சாரியை நேற்று கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+