இரட்டை இலை பெற லஞ்சம்... மேலும் ஒரு ஹவாலா ஏஜென்ட் கைது
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் மேலும் ஒரு ஹவாலா ஏஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பாபு என்ற மேலும் ஒரு ஹவாலா ஏஜென்ட்டை டெல்லி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா, டிடிவி தினகரன் ஆகியோருடன் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனன் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக சுகேஷும், தினகரனும் பேசிய ஆடியோ ஆதாரங்கள் கிடைத்தனர். இந்நிலையில் அவர்களை டெல்லி நீதிமன்ற நீதிபதி பூனம் சௌதரி முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். இதில் சுகேஷுக்கு மே 11-ஆம் தேதி வரையும், தினகரன், மல்லிக்கு மே 15-ஆம் தேதி வரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்களை திகார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் ரூ.10 கோடி பணமானது ஹவாலா ஏஜென்டுகள் மூலம் சென்னையிலிருந்து கொச்சி வழியாக டெல்லியில் உள்ள சுகேஷுக்கு கைமாறியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் நரேஷ் என்ற ஹவாலா ஏஜென்ட் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் அன்றைய தினமே தாய்லாந்தில் இருந்து டெல்லி விமான நிலையத்துக்கு வந்த மற்றொரு ஏஜென்ட்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாபு பாய் என்ற மற்றொரு ஹவாலா ஏஜென்ட்டை போலீஸார் இன்று கைது செய்தனர். இவர் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நரேஷ், சுகேஷ் ஆகியோருக்கு உதவியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதன்படி அவரிட்ம விசாரணை நடைபெற்று வருகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications