தண்டனை பெற்றவர்களுக்கு வாழ்நாள் தடைவிதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பரிந்துரை!!
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு வாழ்நாள் தடைவிதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் சசிகலா உள்ளிட்டோருக்கு சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் ஆன சசிகலா முதல்வாராக திட்டமிட்டார்.
இதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்த அவர், பதவியேற்க வசதியாக சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் அதற்கான பணிகளை செய்ய உத்தரவிட்டார். பதவியேற்பு விழாவுக்கான பணிகளும் ஜரூராக நடைபெற்றன.

சசிக்கு மொத்தமாக 10 வருஷம்
ஆனால் அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பேரிடியாக வர பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. 4 ஆண்டுகள் சிறைவாசம், 6 ஆண்டுகள் தடை என 10 ஆண்டுகள் சசிகலாவால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

பொதுநல வழக்கு
இந்த நிலையில், தண்டனை பெற்ற குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் போட்டியிட தடை விதிக்கக்க வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது குற்றவழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் பரிந்துரை
இதற்கு ஒப்புதல் தெரிவித்து தண்டனை பெற்ற குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை உச்சநீதிமன்றம் ஏற்றால் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறை சென்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

சசிகலாவுக்கு சிக்கல்
தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரை சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்டோருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

உச்சநீதிமன்றம் ஏற்றால்..
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் ஏற்கும் பட்சத்தில் அவர் வாழ்நாளில் தேர்தலில் போட்டியிடவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications