புதிய ”மண்டையிடி” யில் தேர்தல் ஆணையம் - மிசோரத்தில் தேர்தல் நடத்த சிக்கல்
மிசோரம்: "தேர்தலை நடத்தி பார்,வீட்டைக்கட்டிப்பார்" என்றுதான் பழமொழியை மாற்றி அமைக்க வேண்டும் போல. அந்த அளவுக்கு வீதிக்கு வீதிக்கு திடீர் திடீரென்று ஏற்படும் பிரச்சனைகளால் மண்டையை பிய்த்து கொள்கின்றது தேர்தல் ஆணையம்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் வரும் 9 ஆம் தேதி லோக்சபா தேர்தலைநடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில் அங்குள்ள இளைஞர் அமைப்பினர், அரசு சாரா நிறுவனங்கள், பெண்கள் அமைப்பினர் உள்ளிட்டோர் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல் ஓட்டுப்பதிவு தினமான ஏப்ரல் 9 ஆம் தேதி 72 மணி நேர பந்த்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மலைமேல் தேர்தல்:
மிக உயர்ந்த மலைபிரதேசமான மிசோரத்திற்கு தேர்தல் அதிகாரிகள் பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து சென்று அங்கு தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால், அங்கு தற்போது தேர்தல் நடத்தமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது தேர்தல் ஆணையத்துக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
புரு பழங்குடியினர்:
கலவரம் காரணமாக 17 ஆண்டுகளுக்கு முன்பு மிசோராமிலிருந்து வெளியேறிய புரு பழங்குடியினர் திரிபுரா மாநிலத்திலுள்ள 6 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தபால் வாக்குபதிவு:
அவர்களில் மிசோரம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் நிவாரண முகாம்களிலிருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து இம்மாதம் 1 ஆம் தேதி முதல் அங்கு தபால் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மிசோரம் அமைப்புகள் "தடா" :
ஆனால், திரிபுராவிலுள்ள நிவாரண முகாம்களிலில் தங்கவைக்கப்பட்டுள்ள "புரு" பழங்குடியினர் மிசோரம் மக்களவைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோரம் மாநில அமைப்புகள் தேர்தலைப் புறக்கணிக்க வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுத்துள்ளன.
72 மணி நேர பந்த்:
வரும் 9 ஆம் தேதி அன்று அங்கு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வரும் 7 ஆம் தேதி முதல் 72 மணி நேர பந்த் போராட்டத்தை நடத்துவது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications