Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலக்கரி சுரங்க ஊழல் புகார்.. சத்தீஸ்கர் காங்கிரஸ் நிர்வாகிகள் வீட்டில் சல்லடை போடும் அமலாக்கத்துறை!

சத்தீஸ்கர் காங்கிரஸ் நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: நிலக்கரி சுரங்க ஊழல் புகார் தொடர்பாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு சொந்தமாக 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக பூபேஷ் பாகேல் செயல்பட்டு வருகிறார். இதனிடையே பிப்.24 முதல் பிப்.26 வரை 3 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு ராய்ப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நிலக்கரி சுரங்க ஊழல் புகார் தொடர்பாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் வீட்டில் சோதனை

காங்கிரஸ் நிர்வாகிகள் வீட்டில் சோதனை

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொருளாளர் ராம்கோபால் அகர்வால், சத்தீஸ்கர் மாநில கட்டுமான வாரிய தலைவர் சுசில் சன்னி அகர்வால், மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி. சிங், காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர யாதவ், ஐஏஎஸ் அதிகாரிகள் சவுமியா சவுராசியா, சூர்யகாந்த் திவாரி, சமீர் விஷ்னோய், தொழிலதிபர் சுனில் அகர்வால் என மொத்தம் 9 பேருக்கு சொந்தமான 12க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

திடீர் ரெய்டு ஏன்?

திடீர் ரெய்டு ஏன்?

நிலக்கரி சுரங்க முறைகேடு மூலம் பலனடைந்தவர்கள் என கருதப்படுபவர்களுக்குச் சொந்தமான இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும் நிலக்கரியில் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.25 வீதம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூபேஷ் பாகேல் கண்டனம்

பூபேஷ் பாகேல் கண்டனம்

அமலாக்கத் துறையினரின் இந்த சோதனைக்கு முதலமைச்சர் பூபேந்திர பாகேல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு ராய்ப்பூரில் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு வெற்றி அடைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் பாடுபட்டு வருகிறார்கள். அவர்களின் மன உறுதியை குலைக்கும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பாஜகவின் காழ்ப்புணர்ச்சி

பாஜகவின் காழ்ப்புணர்ச்சி

ஆனால், இதுபோன்ற சோதனை மூலம் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியினரை சோர்வடையச் செய்துவிட முடியாது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் அதானி ரகசியங்கள் வெளிவந்ததை பாஜக ரசிக்கவில்லை. இதனால் மக்களின் கவனத்தை திசைதிருப்பவே இதுபோன்ற சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். இதனிடையே, காங்கிரஸ் கட்சி பொருளாளர் ராம் கோபால் அகர்வால் ரூ.52 கோடி பெற்றதற்கான ஆவண ஆதாரங்கள் அமலாக்கத்துறை வசம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+