தலைமை நீதிபதியாக தத்துவை நியமிக்க எதிர்ப்பு- 'ரா' பெண் அதிகாரியின் வழக்கு விசாரணைக்கு ஏற்பு!!
Subscribe to Oneindia Tamil

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிஷா பிரியா பாட்டியா நேற்று ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். அதில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்குள்ளான ஹெச்.எல். தத்துவை உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமித்த அரசு பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி. ரோகினி மற்றும் நீதிபதி என்லா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று வாதிட்டார்.
ஆனால் அதை நிராகரித்த நீதிபதிகள் இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications