"மோடி அலை" சந்திக்கப் போகும் முதல் அடி... டெல்லி!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தல் தொடர்பான வாக்குப் பதிவிக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்க்கும்போது மோடி அலைக்கு கிடைக்கப் போகும் முதல் அடியாக டெல்லி அமையுமோ என்ற அச்சம் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்து, மோடி பிரதமரான பின்னர் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களை அந்த கட்சி கைப்பற்றியுள்ளது. ஆனால் தற்போது டெல்லியில் மோடி அலைக்கு முதல் முறையாக பெரும் அடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மெஜாரிட்டி பெற்று ஆட்சியமைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. கிட்டத்தட்ட அனைத்துக் கருத்துக் கணிப்புகளுமே இதைக் கூறியுள்ளதால் பாஜக வட்டாரம் அதிர்ச்சியடைந்துள்ளது.
அனைத்துக் கருத்துக் கணிப்புகளையும் பார்க்கும்போது மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 42 இடங்களைக் கைப்பற்றலாம் என்று தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தால் அது மோடி அலைக்குக் கிடைக்கும் முதல் பெரும் அடியாக கருதப்படும்.
எனவே இப்போதே பாஜக தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பாதுகாப்பாக பேச ஆரம்பித்து விட்டனர். டெல்லி தேர்தல் முடிவை வைத்து பிரதமர் மீதான மக்களின் கருத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் உண்மையில் இந்தத் தேர்தலில் மோடியே விழுந்து விழுந்து பிரசாரம் செய்தார். தீவிர கவனம் காட்டினார். கூட்டங்கள் பலவற்றில் பேசினார். கெஜ்ரிவாலை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முதுகில் குத்திய துரோகி என்றும் கெஜ்ரிவாலை கடுமையாக சாடினார்.
பாஜக தலைவர் அமீத் ஷாவோ, பாஜகவினரை ஒன்று திரட்டி பிரசாரத்தை வலிமைப்படுத்தினார். பிற மாநிலங்களில் காட்டிய வேகத்தை விட இங்கு கூடுதலாகவே பாஜக காட்டியது.
கிரண் பேடியை பாஜகவுக்குள் இழுத்து வந்தனர். அவரை முதல்வர் வேட்பாளராக்கினர். பாஜக தலைவர்களின் முனுமுனுப்புகளைப் பொருட்படுத்தாமல் பேடிக்கு முழு ஆதரவு காட்டினர். இதன் மூலம் ஆம் ஆத்மியின் வாக்கு வங்கியை உடைக்கலாம் என்று பாஜக நினைத்தது. ஆனால் கெஜ்ரிவால் வாக்கு வங்கி உடையவில்லை என்பதையே இந்த கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
கடந்த தேர்தலில் பாஜக டெல்லியில் 31 இடங்களை வென்றது. இத்தனைக்கும் அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. ஆனால் தற்போதைய தேர்தலில் பாஜக அதிகபட்சம் 26 இடங்களையே வெல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. மோடி பிரதமரானார். அதன் பிறகு நடந்த சட்டசபைத் தேர்தல்களில் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. ஜம்மு காஷ்மீரிலும் கூட அது முத்திரையைப் பதித்தது. இந்த நிலையில் டெல்லியில் மோடி அலைக்கு முதல் வேட்டு வருகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications