Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மோடி அலை" சந்திக்கப் போகும் முதல் அடி... டெல்லி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தல் தொடர்பான வாக்குப் பதிவிக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்க்கும்போது மோடி அலைக்கு கிடைக்கப் போகும் முதல் அடியாக டெல்லி அமையுமோ என்ற அச்சம் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்து, மோடி பிரதமரான பின்னர் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களை அந்த கட்சி கைப்பற்றியுள்ளது. ஆனால் தற்போது டெல்லியில் மோடி அலைக்கு முதல் முறையாக பெரும் அடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit Polls for Delhi Suggest First Major Setback for PM Narendra Modi

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மெஜாரிட்டி பெற்று ஆட்சியமைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. கிட்டத்தட்ட அனைத்துக் கருத்துக் கணிப்புகளுமே இதைக் கூறியுள்ளதால் பாஜக வட்டாரம் அதிர்ச்சியடைந்துள்ளது.

அனைத்துக் கருத்துக் கணிப்புகளையும் பார்க்கும்போது மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 42 இடங்களைக் கைப்பற்றலாம் என்று தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தால் அது மோடி அலைக்குக் கிடைக்கும் முதல் பெரும் அடியாக கருதப்படும்.

எனவே இப்போதே பாஜக தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பாதுகாப்பாக பேச ஆரம்பித்து விட்டனர். டெல்லி தேர்தல் முடிவை வைத்து பிரதமர் மீதான மக்களின் கருத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் உண்மையில் இந்தத் தேர்தலில் மோடியே விழுந்து விழுந்து பிரசாரம் செய்தார். தீவிர கவனம் காட்டினார். கூட்டங்கள் பலவற்றில் பேசினார். கெஜ்ரிவாலை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முதுகில் குத்திய துரோகி என்றும் கெஜ்ரிவாலை கடுமையாக சாடினார்.

பாஜக தலைவர் அமீத் ஷாவோ, பாஜகவினரை ஒன்று திரட்டி பிரசாரத்தை வலிமைப்படுத்தினார். பிற மாநிலங்களில் காட்டிய வேகத்தை விட இங்கு கூடுதலாகவே பாஜக காட்டியது.

கிரண் பேடியை பாஜகவுக்குள் இழுத்து வந்தனர். அவரை முதல்வர் வேட்பாளராக்கினர். பாஜக தலைவர்களின் முனுமுனுப்புகளைப் பொருட்படுத்தாமல் பேடிக்கு முழு ஆதரவு காட்டினர். இதன் மூலம் ஆம் ஆத்மியின் வாக்கு வங்கியை உடைக்கலாம் என்று பாஜக நினைத்தது. ஆனால் கெஜ்ரிவால் வாக்கு வங்கி உடையவில்லை என்பதையே இந்த கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

கடந்த தேர்தலில் பாஜக டெல்லியில் 31 இடங்களை வென்றது. இத்தனைக்கும் அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. ஆனால் தற்போதைய தேர்தலில் பாஜக அதிகபட்சம் 26 இடங்களையே வெல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. மோடி பிரதமரானார். அதன் பிறகு நடந்த சட்டசபைத் தேர்தல்களில் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. ஜம்மு காஷ்மீரிலும் கூட அது முத்திரையைப் பதித்தது. இந்த நிலையில் டெல்லியில் மோடி அலைக்கு முதல் வேட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+