ஃபேஸ்புக்கில் மோடியை அவமதிக்கும் போட்டோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சவுதி தலைவர் ஒருவர் முன்பு தலைவணங்கி நிற்பது போன்ற போலி புகைப்படம் ஃபேஸ்புக்கில் பரவியது குறித்து மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு இறுதியாக சவுதி அரேபியாவுக்கு சென்றார். தனது சவுதி பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நாடு திரும்பினார்.

இந்நிலையில் மோடி சவுதி தலைவர் ஒருவர் முன்பு தலை வணங்கி நிற்பது போன்ற போலி புகைப்படம் ஃபேஸ்புக்கில் வெளியாகியது. அந்த புகைப்படத்தை பார்த்த பாஜக எம்.பி. மகேஷ் கிரி இது குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரிடம் புகார் தெரிவித்தார்.
அவர் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் அந்த புகைப்படத்தை தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் வெளியிட்டது தெரிய வந்தது. புகைப்படத்தின் உண்மை தன்மை அறியாமல் அதை வெளியிட்டதற்காக நிருபர் மன்னிப்புக் கேட்டார்.
நிருபரின் பொறுப்பற்ற செயலுக்காக அவர் பணியாற்றும் தனியார் தொலைக்காட்சியும் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்டது.












Click it and Unblock the Notifications