மத்திய பட்ஜெட் 2015: விவசாயிகளுக்கு கடனுதவிகளை மட்டும் அறிவித்து ”எஸ்கேப்” ஆன மத்திய அரசு
டெல்லி: இந்தியாவின் 67 ஆவது மத்திய பட்ஜெட் - 2015 நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியால் தாக்கல் செய்யப்பட்டு முடிவடைந்த நிலையில் அதில் 2015 ஆம் ஆண்டிற்கான விவசாயிகள் நலன் திட்டங்களாக பட்டியலிட்டப்பட்டவை குறைந்த அளவே.
புதிய திட்டங்களும், மானியங்களும் விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்தாலும், அவர்களுடைய கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்கின்ற ஒன்றாக அமையவில்லை என்பதே உண்மை.

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் நலனுக்கான அறிவிப்புகள்:
இப்பட்ஜெட் முக்கியமாக பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூபாய் 3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஊரக மேம்பாட்டிற்கான மொத்த கடனுதவியாக நபார்டு வங்கிகளுக்கு ரூபாய் 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2015-16 நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 8.5 லட்சம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் அரசினால் ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும்.
சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவும், அவர்களுடைய பயிர் வேளாண்மைக்காகவும் ரூபாய் 15,000 கோடி கடன் உதவி நபார்டு வங்கியின் மூலமாக அளிக்கப்படும்.
சிறுபாசன திட்டங்களுக்காக ரூபாய் 5,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
விவசாயிகளுக்கான பட்ஜெட் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் கடனுதவி குறித்த அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications