இந்துக்களுக்கு ஆபத்தா?.. அப்படித்தான் சொல்லுவாங்க.. ராமர் எல்லாருக்கும் பொதுவானவர்: ஃபரூக் அப்துல்லா
ராமர் அனைவருக்கும் பொதுவானர் என்று பரூக் அப்துல்லா பேசியுள்ளார்
ஸ்ரீநகர்: கடவுள் ராமர் இந்து மக்களுக்கு மட்டுமல்லாமல், எல்லாருக்குமே உரியவர் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீரை பொறுத்தவரை, கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையடுத்து, அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஆட்சி அமையவில்லை.
எனவே, எப்படியும், வரும் வருடம் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்கிறார்கள்.. ஆனால், அதற்குள் அங்குள்ள கட்சி தலைவர்கள், அரசியல் நெடி கலந்த பேச்சை இப்போதே பேச துவங்கிவிட்டார்கள்..
இந்நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, கட்சியில் இருந்து 2 நாளைக்கு முன்பு திடீரென விலகிவிட்டார். இதை பற்றி கேட்டதற்கு, இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கிறேன்.. கட்சித் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும்" என்று காரணம் கூறியிருந்தார்.. இதற்கு பிறகு,

அக்னூர் மாவட்டத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் ஃபரூக் அப்துல்லா பேசியிருக்கிறார். அந்த கூட்டத்தில், தேர்தல் நேரத்தில் இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாக சொல்வார்கள், அதனால் யாரும் அதற்கு இரையாகவேண்டாம் என்று மக்களுக்கு அட்வைஸ் தந்து எச்சரித்துள்ளார்.. அந்த கூட்டத்தில் ஃபரூக் அப்துல்லா பேசியபோது: இங்கே எந்த ஒரு மதமும் கெட்டது கிடையாது.. அதன் மனிதர்கள்தான் கெட்டவர்கள்.. மதம் கிடையாது.. தேர்தல் நேரத்தில், இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாக சொல்வார்கள்.. ஆனால் அதற்கு இரையாகிவிடவேண்டாம்..
இந்தியாவில் 70 முதல் 80 சதவிகிதம் இந்துக்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாருமே ஆபத்தில்தான் இருக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்.. ராமர் இந்துக்களுக்குரியவர் மட்டும் கிடையாது, அவர் அனைவருக்குமானவர்.. நாங்கள் எப்போதும் பாகிஸ்தான் உடன் கைகோர்த்ததில்லை.. ஜின்னா அவ்வளவு சொல்லியும்கூட, என்னுடைய தந்தை பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படவில்லை.. ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.. வேலையில்லா திண்டாட்டம் காஷ்மீரில் அதிகரித்துவிட்டது" என்றார்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications