மாட்டுக்கறி சாப்பிட்டே ஆக வேண்டும்.. இளைஞரை மதமாற்றிய காதலியின் குடும்பத்தினர் மீது வழக்கு
போபால்: தனது காதலியின் குடும்பத்தினர் தன்னை இஸ்லாம் மதத்ததுக்கு மதமாறும் வகையில் பெயரை மாற்றி, மாட்டுக்கறி சாப்பிட வலியுறுத்தி துன்புறுத்தியதாக இளைஞர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் அவரது காதலியின் குடும்பத்தினர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் சுபம் கோஸ்வாமி. கடந்த 2022ம் ஆண்டில் இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இருவரும் நட்பாக பழகினர். அதன்பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர். இருப்பினும் கூட அவர்கள் காதலிக்க தொடங்கினர்.

இந்நிலையில் தான் சுபம் கோஸ்வாமியுடனான காதல் விவகாரம் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து காதலியின் குடும்பத்தினர் சுபம் கோஸ்வாமியை இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர். தினமும் 5 முறை நமாஸ் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
அதோடு அவரது பெயரை சுபம் கோஸ்வாமி என்பதற்கு பதில் அமன் கான் என்று மாற்றம் கடந்த 2023ம் ஆண்டில் மாற்றம் செய்யதனர்.
அதுமட்டுமின்றி மாட்டுக்கறியை உணவாக சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர். இதற்கு சுபம் கோஸ்வாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் காதலியின் குடும்பத்தினர் விடவில்லை. தாங்கள் சொல்வதை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போலீசில் சிக்க வைப்பதாக கூறியுள்ளனர். சுபம் கோஸ்வாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக போலியாக புகார் ஒன்றையும் போலீசில் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபம் கோஸ்வாமியை கைது செய்தனர். 5 மாத சிறை வாசத்துக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இப்படி தொடர் தொல்லையை தொடர்ந்து தன்னை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதாகவும், மாட்டுக்கறி சாப்பிட வலியுறுத்துவதாகவும் சும் கோஸ்வாமி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து சுபம் கோஸ்வாமி மத்திய பிரதேச மாநிலம் கூட்டுறவுறத்துறை அமைச்சரான பாஜகவின் சாரங்கிடம் புகார் தெரிவித்தார். அவர் முழு விஷயத்தை கேட்டறிந்தார். அதன்பிறகு போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து காதலியின் குடும்பத்தினர் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications