டெல்லியில் பரபரப்பு... 2 ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தீ... யாருக்கும் காயமில்லை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி ரயில் நிலைய பணிமனையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இரண்டு ரயில்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புவனேஷ்வர் ராஜ்தானி மற்றும் சேல்தா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் பராமரிப்பு பணிகளுக்காக டெல்லி ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. இன்று திடீரென அந்த ரயில்களில் தீ பிடித்தது.

ஏசி ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பெட்டிகளுக்கும் பரவி இருக்க வேண்டும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 16 தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது ரயில்களில் பயணிகளோ அல்லது ஊழியர்களோ யாரும் இல்லாத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications