முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி திரிணாமுல் காங். ஜோதியில் ஐக்கியம்!
கொல்கத்தா: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவராக திகழ்ந்தவர் பிரணாப் முகர்ஜி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மறைவுகளின் போதே தமக்கு பிரதமர் பதவி கிடைக்கும் என கனவு கண்டார்.

ஆனால் கடைசிவரை பிரணாப் முகர்ஜியால் பிரதமராக முடியவில்லை. இருப்பினும் நாட்டின் ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.
அவரது மகன் அபிஜித் பானர்ஜி, காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இந்த நிலையில் திடீரென மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் அபிஜித் பானர்ஜி.
இது குறித்து கருத்து தெரிவித்த அபிஜித் பானர்ஜி, காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்தேன். எந்த ஒரு பதவியிலும் நான் இருந்தது இல்லை. நான் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து பணிபுரிய வேண்டும்.
தற்போது மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, பாஜகவுக்கு கடுமையான சவாலாக திகழ்கிறார். அதனால் அவரது தலைமையை ஏற்று செயல்படுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications