Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல கெட் அப்பில் சுற்றி திரிந்த அம்ரித்பால் சிங்.. துப்பாக்கி முனையில் பைக் மாறி எஸ்கேப் ஆனது எப்படி?

Subscribe to Oneindia Tamil

மோகா : பஞ்சாப்பில் கடந்த ஒரு மாத காலமாக பல வேடங்களில் தலைமறைவாக இருந்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் அம்ரித்பால் சிங் இன்று போலீசாரிடம் சரணடைந்தார். கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் போலீசார் தேடி வந்த நிலையில், அம்ரித்பால் சிங், பஞ்சாப் மோகா காவல்துறையிடம் இன்று சரண் அடைந்தார். இதையடுத்து அசாம் மாநிலம் திப்ருகாருக்கு அம்ரித்பால் சிங் அழைத்துச் செல்லப்பட உள்ளார்.

சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தான் இயக்கங்களின் தீவிர ஆதரவாளர் அம்ரித்பால் சிங். வாரிஸ் பஞ்சாப் டி என்ற இயக்கத்தின் தலைவராக உள்ள அம்ரித்பால் சிங்குக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Fugitive Amritpal singh arrested after a month of hiding life

தப்பிய அம்ரித்பால் சிங் : அம்ரித்பாலின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து அஜ்னாலா பகுதி சிறையில் அடைத்து வைத்திருந்தனர். லவ்பிரீத் சிங்கை விடுவிக்க வலியுறுத்தி, அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் சிலர் கைகளில் வாள், துப்பாக்கிகளை ஏந்தியவாறு, அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அம்ரித்பாலை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியது.

அப்போது, ஜலந்தர் ஷாகோட் பகுதி டோல்கேட் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின்படி அம்ரித்பால் சிங் காரில் தப்பிய தகவல் வெளியானது. அதன் பின்னர் அவர் தலைப்பாகையை மாற்றி, மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பினார். லூதியானா பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பைக்கை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவர் திருடிச் சென்றது தெரியவந்தது.

Fugitive Amritpal singh arrested after a month of hiding life

மாறுவேடங்களுடன் : அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் போலீசார் எடுத்து வரும் ஆபரேஷனின் ஒரு பகுதியாக அவரது கூட்டாளிகள் மீது தொடர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அம்ரித்பால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால், அவ்வப்போது சில சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

அம்ரித்பால் சிங், மாறுவேடத்தில் இருப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. காவல்துறையிடம் சிக்காமல் சட்டை பேன்ட் அணிந்தபடி அவர் சாலையில் குடையுடன் சுற்றித் திரிவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தன. வழக்கமாக, அவர் பாரம்பரிய சீக்கிய உடைகளைத்தான் அணிந்திருப்பார்.

Fugitive Amritpal singh arrested after a month of hiding life

சரணடைந்த அம்ரித்பால் : தலைமறைவாக இருந்த அமரித்பால் சிங்கை கடந்த 1 மாதத்துக்கும் மேலாக போலீசார் தேடி வந்த நிலையில், அண்மையில் அம்ரித்பாலின் மனைவி கிரண்தீப் கவுர் லண்டன் செல்ல முயன்றபோது, அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தான் அம்ரித்பால் சிங் தானாக முன்வந்து இன்று போலீசாரிடம் சரணடைந்துள்ளார். அவரை கைது செய்துள்ள பஞ்சாப் மோகா போலீசார் அவரை சிறையில் அடைக்கவுள்ளனர். அம்ரித்பால் சிங் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+