ஜாலிக்காக ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த ஜெர்மனி நபர்
மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் அவசரகால கதவை திறந்த ஜெர்மனியைச் சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜெர்மனியைச் சேர்ந்தவர் ஸ்டீவ் டிட்ஷ்லர். அவர் அபுதாபியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் நேற்று மும்பை வந்தார். மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்ட பிறகு அவர் அவசரகால கதவை திறந்தார்.

இதை பார்த்த விமான சிப்பந்திகள் ஓடிவந்து ஏன் இந்த கதவை திறந்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் ஜாலிக்காக கதவை திறந்ததாக தெரிவித்தார். உடனே சிப்பந்திகள் மத்திய பாதுகாப்பு படையினரை வரவழைத்து ஸ்டீவை சாஹர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர்.
மத்திய பாதுகாப்பு படையினர் ஸ்டீவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்டீவ் நேற்று மதியம் 3 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் செல்ல டிக்கெட் வாங்கியிருந்தார். ஆனால் அவர் டெல்லிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications