வாட்ஸ்அப் குரூப் வழியாக ஹைடெக் விபசாரம்.. சிக்கிய 'தாரா ஆன்ட்டி'.. கஸ்டமர்கள் கலக்கம்
வாட்ஸ்-அப்பில் டெல்லியை மூன்றாக பிரித்து விபசார வாடிக்கையாளர்களுக்காக தனித்தனியாக மூன்று குரூப்பை உருவாக்கி தாரா இயக்கி வந்துள்ளார்.
டெல்லி: வாட்ஸ்-அப் வாயிலாக பெண்களின் புகைப்படங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி விபசாரம் செய்து வந்த 45 வயது பெண்மணியை உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் போலீசார் கைது செய்து உள்ளனர்.
காசியாபாத் நகரிலுள்ள சாலிமார் கார்டனில் உள்ள பிளாட்டில் தங்கியிருந்து பாலியல் தொழிலை செய்து வந்து உள்ளது அம்பலமாகியுள்ளது.
விபச்சாரத்திற்காக வாட்ஸ் - அப்பில் குரூப் ஒன்றை தொடங்கி மூன்று வருடங்களாக அதன் வாயிலாக வாடிக்கையாளர்களை சேர்த்து உள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

பலாத்கார வழக்கில் துப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, விபசாரத்தில் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியபோது, காசியாபாத்தில் தாரா என்ற பெண் விபசாரத்தை பெருமளவில் தொழிலாக செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெண் குற்றவாளி
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி தாராதான் என்றும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தீவிரமாக கண்காணித்து வந்த போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தாரா பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பல குரூப்புகள்
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், வாட்ஸ்-அப்பில் டெல்லியை மூன்றாக பிரித்து வாடிக்கையாளர்களுக்காக தனித்தனியாக மூன்று குரூப்பை உருவாக்கி தாரா இயக்கி வந்துள்ளார். போலீசார் தாராவின் செல்போன்களையும் பறிமுதல் செய்தபோது இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

வாடிக்கையாளர்கள் குவிந்தனர்
ஒவ்வொரு வாட்ஸ்அப் குரூப்பிலும் சுமார் 60 முதல் 100 வரையிலான வாடிக்கையாளர்களை தாரா இணைத்து உள்ளார். இவ்விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீஸ் தேடி வருகிறது. 8 வருடங்களாக விபசாரம் செய்து வந்த தாரா கடந்த மூன்று வருடங்களாக வாட்ஸ் அப்பில் செயல்பட்டு வந்து உள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்ணை வைத்து, அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதால் அவர்கள் குடும்பத்திற்கு அஞ்சி நடுங்கிக் கொண்டுள்ளனராம். தாராவை கஸ்டமர்கள் தாரா ஆன்டி என அன்போடு அழைத்து வநத்தாக கூறுகிறார்கள் போலீசார். இருக்காதா பின்னே..
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications