ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக குலாம்நபி ஆசாத் தேர்வு!
டெல்லி: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குலாம் நபி ஆசாத், இன்று பதவியேற்றுக்கொண்டார். அத்துடன் அவர் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குலாம்நபியின் 6 ஆண்டு கால ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைவதால், அவர் கடந்த 8-ந் தேதி நடந்த தேர்தலில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 65 வயதான காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து எம்.பி. ஆவது இது 5-வது முறையாகும்.
ஆசாத் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் பிப்ரவரி 16-ந் தேதியில் இருந்து எதிர்க்கட்சி தலைவராக செயல்பட அங்கீகாரம் அளித்திருப்பதாக ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.
குலாம் நபி ஆசாத்துடன் ஜம்மு காஷ்மீரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பி.டி.பி. எம்.பி.க்களும், ஒரு பா.ஜ,க. உறுப்பினரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications