1000 பெண்கள் டேக் செல்ஃபி புள்ள...
ஜெய்ப்பூர்: பெண்களுக்கான அதிகாரத்தை வலியுறுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி ‘செல்ஃபி' எனப்படும் சுயப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி ராஜஸ்தானில் நடைபெற்றது.
கடந்த 30 ஆண்டுகளில் ஒருகோடியே 20 ஆயிரம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாது, பெண் சிசு கொலை, முறையான சிகிச்சையின்றி நோய் காரணமாக உயிரிழத்தல் உள்ளிட்ட காரணங்களால் பெண்களின் விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.

1961 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் இருந்தனர். ஆனால், 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, அந்த எண்ணிக்கை 919 ஆக குறைந்தது.
இந்நிலையில், பெண்களின் அதிகாரம், பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல் உள்ளிட்டவைகளை மைய கருத்தாக கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சுமார் 1118 பெண்கள் ஒன்று கூடி செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இந்த பிரமாண்ட சுய படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி கின்னஸ் சாதனை முயற்சியாகவும் பதிவு செய்யப்பட்டது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications