காஷ்மீரில் இலவச போன் பேசும் வசதி அளிக்கிறது பிஎஸ்என்எல் - ரவி சங்கர் பிரசாத்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. வெள்ளம் வேகமாக வடிந்து வருவதால் குடிநீர், மின்சாரம் ஆகிய இரண்டும் மறு சீரமைக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு பக்கத்தில் தகவல் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் தன் தீவிர முயற்சியால் 80 சதவீத மொபைல் தொடர்பு சேவையை தொடங்கியுள்ளது. ஸ்ரீநகரில் 55 தொலை தொடர்பு கோபுரங்கள் மீண்டும் கட்டப்பட்டு விட்டன. இதன் காரணமாக காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பு தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தொலைத்தொடர்பு சேவையை மீண்டும் துவக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் தொலைத் தொடர்பு சேவையை மீண்டும் முழு அளவில் துவக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை மொத்தமுள்ள 6811 கோபுரங்களில் 1208 கோபுரங்கள் மீண்டும் செயல்படத்துவங்கியுள்ளன.
வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் இலவச மொபைல்போன் சேவையை பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருவாரத்திற்கு மக்கள் இலவசமாக பேசிக்கொள்ளலாம். இதே போல், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் இலவசமாக பேசிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளன. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications