சிக்கனம்.. மத்திய அரசு இனி காந்தி பிறந்த நாளை மட்டுமே கொண்டாடுமாம்!
டெல்லி: தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளைத் தவிர்த்து மற்ற தலைவர்களின் பிறந்தநாள் விழாக்களை இனி அரசு சார்பில் நடத்துவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், அரசு சார்பில் வழங்கப்படும் விளம்பரங்களுக்கான செலவையும் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இதற்காக விளம்பரக் கொள்கையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் அஜித் குமார் ஷெத் கூறுகையில், ‘விளம்பர கொள்கையை மறுசீராய்வு செய்ய அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக அனைத்து அமைச்சகங்களுக்கும் மத்திய அமைச்சரவை செயலகத்தில் இருந்து கடிதம் அனுப்பட்டுள்ளது. அரசு சார்பில் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் விழா கொண்டாடப்பட வேண்டிய குறிப்பிட்ட தலைவர்கள் குறித்த பட்டியல் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான 15 தலைவர்களின் பெயர்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
இதுவரை, இந்திரா, ராஜீவ், அம்பேத்கார், சர்தார் பட்டேல், லால் பகதூர் சாஸ்திரி, நேரு, சவுத்ரி சரண் சிங், சுவாமி விவேகானந்தர், பகத் சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜெக்ஜீவன் ராம், மகாத்மா காந்தி போன்ற தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் இறந்தநாள் விழாக்களை கொண்டாட பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் தனித்தனியாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால், சம்பந்தப்பட்ட தினங்களில் இது போன்ற விளம்பரங்களே செய்திதாள்களில் நிரம்பி வழிவதாகவும், இதனை தவிர்ப்பதற்காகவும், இதற்கான செலவைக் குறைப்பதற்காகவுமே மத்திய அரசு இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாகக் கூறப் படுகிறது.
இதன்படி, இனி குறிப்பிட்ட தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் இறந்தநாள் விழாவிற்காக அரசு சார்பில், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் மட்டுமே விளம்பரம் தரப்படும். மேலும் ஒரே விழாவிற்காக பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் பலவிதமான விளம்பரங்கள் கொடுக்கப்படுவதும் நிறுத்தப்படும்.
மத்திய அரசின் இந்த தீர்மானத்தை தொடர்ந்து, குறிப்பிட்ட முக்கியமான தலைவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில் உள்துறை அமைச்சகம் இறங்கி உள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை, 15 முன்னாள் தலைவர்களின் பிறந்தநாள் மற்றம் இறந்த நாள் விழாவிற்காக மத்திய அரசு சார்பில் ரூ.142 கோடிக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் இந்திரா, ராஜீவ் மற்றும் நேருவின் பிறந்தநாள் மற்றும் இறந்தநாள் விழாவிற்காக மட்டும் ரூ.53 கோடி செலவிடப்பட்டுள்ளதாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications