மேற்குவங்கத்தில் பந்த்.. கல்வீச்சில் இருந்து தப்பிக்க இந்த பஸ் டிரைவர்களின் ஐடியாவ பாருங்க மக்களே!!
மேற்குவங்கத்தில் இன்று பாஜக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
Recommended Video
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் இன்று பாஜக 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மீறி இயங்கும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் உள்ள உயர்நிலை பள்ளியில் வரலாறு மற்றும் கணிதம் ஆசிரியர்கள் இடம் காலியாக இருக்கும் போது உருதுக்கு மட்டும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனைக் கண்டித்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினர், மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பாஜக பந்த்
இதில் ஏபிவிபி அமைப்பின் தலைவர் ராஜேஸ் சர்க்கார் உள்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து பாஜக முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
பாஜக அழைப்பு
12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. இதனால் கொல்கத்தா, கூச்பிகார் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
|
கண்ணாடிகள் சேதம்
ஒரு சில இடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் மீது பாஜகவினர் கற்களை வீசி தாக்கினர். இதனால் பேருந்துகளில் கண்ணாடிகள் நொறுங்கின.
ஹெல்மெட்
கூச்பிகார் பகுதியில் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கினர்.
|
பாதுகாப்பு
அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முழு அடைப்பில் ஈடுபடுவோர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கைது
இதனிடையே ஹவுராவில் பாஜகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் கடைகளை மூடுமாறு உரிமையாளர்களிடம் பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.