For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்: 89 தொகுதிகளுக்கு சனிக்கிழமை முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு!

குஜராத் சட்டசபை தேர்தலில் 89 தொகுதிகளுக்கு நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக நாளை 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தின் 182 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நாளையும் 14-ந் தேதியும் நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் டிசம்பர் 18-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Gujarat Assembly Elections: Voting for 1st phase tomorrow

முதல் கட்டமாக நாளை 19 மாவட்டங்களின் 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 24,689 வாக்குச் சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

2,12,31,652 கோடி வாக்காளர்கள் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண்கள்- 1,11,05,933; பெண்கள்- 1,01,25,472; மூன்றாம் பாலினத்தவர்- 247.

2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதில் 2,22,96,867 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

English summary
The voting for the first phase of Assembly Elections in Gujarat is set to take place on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X