குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் தீ விபத்து - 8 பேர் பலி

குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவர்.

அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள ஐசியு வார்டில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. மற்ற நோயாளிகளை உடனடியாக போலீஸார், தீயணைப்பு வீரர்களும் வேறு மருத்துவமனைக்கு மாற்றினர்.

Gujarat: Fire accident at Ahmedabad Hospital, 8 dead

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட அகமதாபாத் நகர உதவி ஆணையர் எஸ்பி ஸலா, விபத்து பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். தீ கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கூறியுள்ளளார்.

Gujarat: Fire accident at Ahmedabad Hospital, 8 dead
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+