முதல்வர் கொடுத்த காலி “கவர்” – ஹரியானா காமன்வெல்த் வெற்றி வீரர்கள் அதிர்ச்சி!
சோனேபட்: ஹரியானா முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா கொடுத்த விளையாட்டு வீரர்களுக்கான காசோலை பரிசு கவரில் காசோலை இல்லாததால் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற அரியானாவை சேர்ந்த சுஷில் குமார், யோகேஷ்வர் தத் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்களுக்கு பாராட்டு மற்றும் பரிசுப்பணம் தரப்பட்டது.

பதக்கம் வெல்லாத மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் தலா ரூபாய் 5 லட்சம் கொடுக்க முடிவு செய்தனர்.இந்த விழா சமீபத்தில் நடந்தது. இதில் பிரசாந்த் கர்மாகர் (நீச்சல்), ஜெய்தீப் சிங்கிற்கு (வட்டு எறிதல்) அரியானா முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா பரிசு கொடுத்தார்.
இதைத் திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தான் கிடைத்தது. இந்த கவரில், வாழ்த்து நோட்டீஸ் மட்டுமே இருந்தது. ரூபாய் 5 லட்சத்துக்கான காசோலை எதுவும் இல்லை.
இதுகுறித்து ஜெய்தீப் சிங் கூறுகையில்,'' காமன்வெல்த் போட்டியில் வட்டு எறிதல் நான்காவது இடம் பெற்றேன். இங்கு பரிசுக் கவரை திறந்து பார்த்த போது, ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். விளையாட்டு வீரர்களை அரசு இப்படி நடத்தியிருக்கக் கூடாது'' என்றார்.
ஹரியானா பாரா ஒலிம்பிக் செயலர் கிரிராஜ் சிங் கூறுகையில்,'' இந்த இருவரும் பதக்கம் வெல்லவில்லை. இருப்பினும், கடைசி நேரத்தில் இவர்கள் பெயர், விருது பட்டியலில் சேர்க்கப்பட்டதால் தவறு நடந்திருக்கலாம்,'' என்று கூறியுள்ளார்.
10 நாளில் கிடைக்கும் வீரர்களுக்கு உரிய பணத்தை அனுப்பி வைப்பதாக ஹரியானா விளையாட்டு அமைச்சகம் உறுதி தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications