பெங்களூரில் கொட்டித் தீர்த்த கன மழை.. சாலைகளில் வெள்ளம்
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் தொடர்ந்து மழை கொட்டியது. தினமும் இரவு நேரத்தில் கன மழை பெய்து வந்த நிலையில், இன்று நண்பகலில் ஆரம்பித்த மழை, மாலை வரை தொடர்ந்தது.
செப்டம்பர் மாதத்தில் 40 வருடங்களுக்கு பிறகு சாதனை அளவு மழை பெய்துள்ளது. இந்த நிலையில், அக்டோபர் மாதத்திலும் கன மழை பெய்து வருகிறது. இன்று பெய்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிரமப்பட்டனர்.
மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் டிராபிக் நெரிசலில் சிக்கிக்கொண்டனர். பன்னேருகட்டா சாலை, ஜேபிநகர் 3வது ஸ்டேஜ் பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
#namabengaluru #BangaloreRain #Bangalore #BengaluruRains #BBMP pic.twitter.com/LXbhkxVA7x
— Gaurav Bajoria (@Gauravbajoria) October 5, 2017
கன்னிகாம் ரோடு, எலக்ட்ரானிக் சிட்டி, மடிவாளா, பொம்மனஹள்ளி உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மழையின் அடத்தியும் அதிகமாக இருந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Waters enters into houses and apartments in #Bengaluru #BengaluruRains @NewIndianXpress pic.twitter.com/anePtvS9uE
— Kiran_TNIE (@tniekiran1) October 5, 2017
பெங்களூரில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே மாலை சற்று நேரம் நின்றிருந்த மழை, இரவு மீண்டும் கொட்டியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
Bengaluru: Water-logging in parts of the city after heavy rain pic.twitter.com/H4dnGXAl4b
— ANI (@ANI) October 5, 2017