Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனியாக இருந்த பெண்ணை சீரழித்த எலக்ட்ரீஷியன்.. வயரிங் பண்ண வந்த இடத்தில் அட்டகாசம்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவில் வீட்டில் தனியாக இருந்த 49 வயது பெண் எலக்ட்ரீஷியனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் சந்தோஷ்பூர் பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் காம்பிளக்ஸில் வசித்து வருபவர் உமா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 49 வயதாகும் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் கல்லூரி மாணவர். அவரது வீட்டில் கடந்த சில நாட்களாக வயரிங் வேலை நடந்து வந்துள்ளது.

பிக்ரம் என்பவரும் மற்றொரு எலக்ட்ரீஷியனும் உமாவின் அபார்ட்மென்ட்டில் வயரிங் வேலை பார்த்துள்ளனர். அப்போது மதிய வேளையில் உமா வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு பிக்ரம் உமாவின் அபார்ட்மென்ட் கதவை தட்டினார். உமா கதவை திறந்ததும் எலக்ட்ரிக் பெல்லின் வயரிங்கை முழுமையாக மாற்றவில்லை. அதை மட்டும் முடித்துவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வீட்டில் உமா தனியாக இருப்பதை தெரிந்த கொண்ட பிக்ரம் அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். பிக்ரம் சென்ற பிறகு உமா இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிக்ரமை கைது செய்தனர்.

பிக்ரம் பற்றி போலீசார் கூறுகையில்,

சோனாபூர் பகுதியில் பிக்ரம் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அந்த பகுதி சரியில்லை என நினைத்து குழந்தைகளை வேறு இடத்தில் வசிக்கும் உறவினர்கள் வீட்டில் விட்டுள்ளார். அவருக்கு திருடும் எண்ணம் இல்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சிரித்துக் கொண்டிருக்கிறார் என்றனர்.

நுழைவாயிலில் பாதுகாவலர்கள், சிசிடிவி கேமரா இருப்பதால் அபார்ட்மென்ட்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று நினைக்கும் பெண்கள் இனியாவது உஷாராக இருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+